திருச்சியில் நடைபெற்ற 47வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட நடிகர் அஜித்குமார் 4 தங்கப் பதக்கங்கள் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற 47 வது ரைபிள் கிளப் துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித் கலந்து கொள்ள வந்திருந் நிலையில், இந்த செய்தியை அறிந்த அவரது ரசிகர்கள் குவியத் தொடங்கினர். இந்நிலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது. இதனையடுத்து ரசிகர்களுக்கு ப்ளைன் கிஸ் கொடுத்த நடிகர் அஜித் ரசிகர்களை தாக்க வேண்டாம் என போலீசாரிடம் கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பாக பேசிய காவல்துறை துணை ஆணையர் ஸ்ரீதேவி,ரசிகர் யாருக்கும் எந்த பிரச்னையும் வரக்கூடாது, நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதை செய்கிறேன் என அஜித் கூறியதாக தெரிவித்தார். மேலும், அஜித் ரசிகர்களை கட்டுப்படுத்த எனக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார், இறுதியில் அனைத்து காவலர்களிடமும் நன்றி கூறி விடைபெற்றார் என்றும் உண்மையிலையே அவர் நைஸ் ஜென்டில்மேன் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், திருச்சியில் நடைபெற்ற 47வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட நடிகர் அஜித்குமார் 4 தங்கப் பதக்கங்கள் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…