நடப்பாண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி தொடங்கவுள்ளது. இதில் இந்தியா உள்ளிட்ட ஆறு நாடுகளின் அணிகள் பங்கேற்கவுள்ளன.
2023ம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பாதுகாப்பு பிரச்சனை காரணமாக பாகிஸ்தானில் இந்திய அணி விளையாட முடியாது என இந்திய கிரிக்கெட் வாரியம் மறுப்புத் தெரிவித்தது. இதற்கு பதிலடியாக, இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க மாட்டோம் என பாகிஸ்தான் அணி அறிவித்தது.
இரு நாட்டு அணிகளிடையேயான இந்த பிரச்சனையைத் தொடர்ந்து, ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா விளையாடும் ஆட்டங்களை இலங்கையிலும், மற்ற அணிகள் விளையாடும் போட்டிகளை பாகிஸ்தானிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு நடைபெறும் 16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய ஆறு நாடுகளின் அணிகள் மோதுகின்றன. ஏ மற்றும் பி என இந்த 6 அணிகளும் பிரிக்கப்பட்டுள்ளன.
13 ஆட்டங்களைக் கொண்ட இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் 4 போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. மீதமுள்ள 9 போட்டிகள் இலங்கையில் நடைபெறுகிறது. 2022ம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பையை இலங்கை அணி வென்றது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…