ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பும்ரா மற்றும் ஸ்ரேயாஸ் களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசிய கண்டத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆசிய கிரிகெட் கவுன்சிலால் நடத்தப்படுகிறது. இந்தாண்டிற்காக போட்டிகள் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. போட்டிகள் அனைத்தும் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடத்தப்படும்.
இந்தாண்டிற்கான ஆசிய கோப்பை போட்டியை நடத்த பாகிஸ்தான் உரிமை பெற்றிருந்தாலும், பாதுகாப்பு காரணம் கருதி இந்தியா அங்கு விளையாட மறுப்பு தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து பாதி போட்டிகள் பாகிஸ்தானிலும், இந்தியா பங்குபெறும் மற்றும் இறுதி போட்டிகளை வேறுநாட்டில் நடத்தலாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.
குறிப்பாக ஆசிய கோப்பையில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நோபாளம், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 6அணிகள் பங்குபெறுகிறது. 13போட்டிகளை கொண்ட இந்த தொடரில் 4ஆட்டங்கள் பாகிஸ்தானிலும், 9ஆட்டங்கள் இலங்கையிலும் நடைபெறவுள்ளது.இருபிரிவுகளாக பங்குபெறும் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஒரு பிரிவிலும், இலங்கை, வங்க தேசம், ஆப்கானிஸ்தான் ஒரு பிரிவிலும் பங்கு பெறும்.
இந்திய தரப்பில் முதுகு சிகிச்சைக்கு ஆப்ரேஷன் செய்து கொண்ட பும்ரா, ஸ்ரேயாஸ் அய்யர் டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டிகளை தவறவிட்ட நிலையில், உடற்தகுதி பெற்று ஆசிய கோப்பையில் விளையாட தயாராக உள்ளனர். இதற்காக விரைவில் இருவரும் பயிற்சியை தொடங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…