இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வரவிருக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022க்கான அணியை செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு ஒரு நாள் முன்னதாக அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
சேத்தன் ஷர்மா தலைமையிலான ஐந்து பேர் கொண்ட இந்தியத் தேர்வுக் குழு, வரும் ஆசியக் கோப்பை 2022 முடிந்ததும் மும்பையில் கூடி, அக்டோபர் முதல் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை நடைபெறவுள்ள T20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை இறுதி செய்யும்.
டி20 உலகக் கோப்பைக்கான வாய்ப்பைப் பெறுவதற்கு இந்திய வீரர்களுக்கு ஆசியக் கோப்பை கடைசி வாய்ப்பாக இருக்கும். ஏனெனில் போட்டி முடிந்து நான்கு நாட்களுக்குப் பிறகு தேர்வுக் குழு செப்டம்பர் 11 அன்று கூடும். அப்போது டி20 உலகக்கோப்பைக்கான அணியை இறுதி செய்யும்.
ஆசியக் கோப்பை 2022 முடிவடைந்த நான்கு நாட்களுக்குப் பிறகு, இந்தியத் தேர்வாளர்கள் மும்பையில் கூடி 2022 டி20 உலகக் கோப்பைக்கான அணியைத் தேர்ந்தெடுத்து அறிவிப்பார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…