இந்திய கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங்கின் விக்கிபீடியா பக்கத்தில் அவருக்கு காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது போல் மாற்றப்பட்டது எப்படி என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு இந்தியாவில் உள்ள விக்கிபீடியா நிர்வாகிகளுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.
நேற்று ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானிடம் இந்தியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகு, அந்தப் போட்டியில் ஒரு கேட்சை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தவறவிட்டதற்காக இந்தியாவின் தோல்விக்குப் பிறகு விமர்சிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, காலிஸ்தானி தேசிய கிரிக்கெட் அணிக்கு விளையாட அர்ஷ்தீப் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவரது விக்கிபீடியா பக்க பதிவுகள் மாற்றப்பட்டிருந்தது. எனினும் பக்கம் பின்னர் மீட்டெடுக்கப்பட்டது.
இந்நிலையில், மாற்றப்பட்டது எப்படி என்பது குறித்து விளக்கமளிக்க விக்கிப்பீடியாவின் இந்திய நிர்வாகிகளுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…