இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, இந்த ஆண்டு தொடக்கத்தில் டெஸ்ட் கேப்டன் பதவியை கைவிட்ட பிறகு எம்எஸ் தோனி தன்னை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா இழந்ததை அடுத்து, கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகினார். அவர் தனது வாழ்க்கையின் கடினமான கட்டங்களில் ஒன்றைக் கடந்து கொண்டிருந்தார். பின்னர் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து சர்ச்சைக்குரிய வகையில் நீக்கப்பட்டார்.
33 வயதான அவர் தொடர்ந்து மோசமான ஃபார்மில் இருந்த நிலையில், ஒரு மாத ஓய்வுக்குப் பிறகு புதிதாகத் திரும்பியுள்ளார். டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்த பிறகு தோனி தனிப்பட்ட முறையில் அவருக்கு செய்தி அனுப்பியதைப் பற்றி குறிப்பிட்டு, தோனிக்கும் தனக்கும் இடையே உள்ள ஒரு சிறப்பான உறவை பற்றி எடுத்துரைத்தார்.
பலரிடம் தனது தொடர்பு எண் இருப்பதாகவும், ஆனால் அவர் முன்பு விளையாடிய வீரர்களில் தோனி மட்டுமே அவரைத் தொடர்புகொண்டு அந்த முடிவு குறித்து பேசியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பல்வேறு தளங்களில் நிறைய ஆலோசனைகளை வழங்குவது எனக்கு முக்கியமில்லை என்கிறார் கோலி.
இதற்கிடையில், கடந்த சில மாதங்களாக பல்வேறு நிபுணர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் பல ஆலோசனைகளை விராட் கோலி கேட்டதாக தெரிகிறது.
பலர் தனக்கு பல்வேறு தளங்கள் மூலம் ஆலோசனைகளை வழங்குகிறார்கள், ஆனால் ஒருவருக்கு உதவ விரும்பினாலும் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ளவே தான் விரும்புவேன் என்று கூறிய கோலி, பொதுவெளியில் ஆலோசனைகளை அள்ளித் தெளிக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் குறித்து மறைமுகமாக விமர்சித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…