மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நான்கு டெஸ்ட் போட்டிகளைத் தொடர்ந்து, இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றன. மார்ச் 17 ஆம் தேதி இந்த போட்டிகள் தொடங்க உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறும் அனைத்து முக்கியமான ஒருநாள் உலகக் கோப்பையை மனதில் வைத்து தயாராவதே இலக்காக இருக்கும்.
இந்நிலையில், பிக்பாஷ் தொடரில் உள்ள மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் பயிற்சியாளர் டேவிட் ஹஸ்ஸி, 34 வயதான மேக்ஸ்வெல், மார்ச் நடுப்பகுதியில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் நிச்சயம் பங்கேற்பார் என ஆரூடம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பரில் டி20 உலகக் கோப்பையில் இருந்து ஆஸ்திரேலியா வெளியேறிய சில நாட்களுக்குப் பிறகு, நண்பரின் பிறந்தநாள் விழாவில் தவறி விழுந்ததால், மேக்ஸ்வெல்லின் இடது ஃபைபுலாவில் முறிவு ஏற்பட்டது.
மேக்ஸ்வெல் மிக மோசமான காயத்துடன் அவதிப்பட்டு வரும் நிலையில், அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாட மாட்டார் என்றே அனைவரும் நினைத்தனர். மேலும் அவர் விரைவில் களத்திற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படவில்லை.
இந்நிலையில், மார்ச் 17 ஆம் தேதி மும்பையில் தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலியா அணியில் தனது இடத்தை உறுதி செய்வதற்காகநட்சத்திர ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் ஜனவரி இறுதியில் பயிற்சியைத் தொடங்குவார் என்று ஹஸ்ஸி தெரிவித்தார்.
இதற்கிடையே, இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…