2011 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக உலகக் கோப்பையை இந்தியா நடத்த உள்ளது. மேலும் இந்த ஆண்டு அதற்குத் தயாராகும் வகையில் பல ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
2022 ஆம் ஆண்டில் டி 20 உலகக் கோப்பைக்காக அதிகம் தயாராகி வந்ததால், ஒருநாள் போட்டிகளில் அதிகம் விளையாடவில்லை. இதனால் 2022இல் ஒருநாள் போட்டிகள் ஓரளவு புறக்கணிக்கப்பட்டாலும், இந்த 2023 ஆம் ஆண்டில் அதிக அளவில் போட்டிகளில் பங்கேற்பதால், உலகக்கோப்பைக்கு முன்பாக இந்திய வீரர்களுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும்.
எனினும் இந்த ஆண்டின் முதல் ஒருநாள் போட்டியை இந்திய அணி இன்னும் விளையாடாத நிலையில், முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் உலகக்கோப்பைக்கான இந்திய அணியைத் தேர்வுசெய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் அணியில் இடம் பெற மாட்டார் என்றே பெரும்பாலானவர்கள் கணித்துள்ளனர். எனினும், இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா, அஸ்வின் அணியில் இடம் பெற விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பைக்கான அணியில் யுஸ்வேந்திர சாஹல் தேர்வு செய்யப்படுவார் என்பதால், இந்த ஆண்டு விளையாடவிருக்கும் சில ஒருநாள் போட்டிகளில் இந்தியா அவருக்கு ஓய்வு கொடுத்தால் அது மிகவும் நல்லது என்றும் அவர் கூறினார். அஸ்வினும் சாஹலும் இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலன் என்று அவர் கூறியுள்ளார்.
இதே போல் வேகப்பந்துவீச்சை பொறுத்தவரை ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் அணியில் இடம் பெற வேண்டும் என விரும்புவதாக அஜய் ஜடேஜா கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…