இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆசிய கோப்பை 2022க்கான இந்திய அணியை அறிவித்தது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) தொடங்க உள்ள மெகா நிகழ்வில் இந்திய அணியை ரோஹித் சர்மா வழிநடத்துவார். 2022 ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டி செப்டம்பர் 11ஆம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டுக்கான போட்டியில் இந்தியாவின் முதல் போட்டி ஆகஸ்ட் 28 அன்று பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான மோதலுடன் தொடங்க உள்ளது. கடைசியாக 2021 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் ஏற்பட்ட பாகிஸ்தானிடம் ஏற்பட்ட தோல்விக்கு பழிவாங்குவதுடன் இந்த தொடரை இந்தியா தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தொடருக்கான முன்னோட்டமாக இது இருக்கும் என்பதால், இதில் பங்கேற்கும் அனைத்து நாடுகளும் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் முனைப்புடன் உள்ளது.
2022 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி : ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திரா சாஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான்.
பேக் அப் வீரர்கள் : ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் சாஹர், அக்சர் படேல்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…