Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரிஷப் பந்த் சீக்கிரம் குணமடையனும்.. மனமுருகி பிரார்த்தித்த இந்திய வீரர்கள்!!

Sekar Updated:
ரிஷப் பந்த் சீக்கிரம் குணமடையனும்.. மனமுருகி பிரார்த்தித்த இந்திய வீரர்கள்!!Representative Image.

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டிக்காக மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சிலர், இன்று காலை உஜ்ஜயினின் புகழ்பெற்ற மகாகாலேஸ்வர் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தனர். 

சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் போன்றோர் இந்திய கிரிக்கெட் அணியின் ஊழியர்களுடன் இன்று அதிகாலை மகாகால் கோவிலை அடைந்தனர். இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் சூர்யகுமார் யாதவ் கூறுகையில், தங்கள் அணி வீரர் ரிஷப் பந்த் விரைவில் குணமடைய மகாகலை பிரார்த்திக்கிறோம் என்றார்.

ரிஷப் பந்த், கடந்த டிசம்பர் 30 அன்று கார் விபத்தில் சிக்கி பலத்த காயங்களுக்கு ஆளானார். இருப்பினும் அவர் குணமடைந்து நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறார்.

"ரிஷப் பந்த் விரைவில் குணமடைய நாங்கள் பிரார்த்தனை செய்தோம். அவரது மறுபிரவேசம் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. நியூசிலாந்துக்கு எதிரான தொடரை நாங்கள் ஏற்கனவே வென்றுள்ளோம், அவர்களுக்கு எதிரான இறுதிப் போட்டியை எதிர்நோக்குகிறோம்" என்று சூர்யகுமார் யாதவ் கூறினார்.

கோவிலில் அதிகாலையில் நடைபெற்ற சிவபெருமானின் 'பஸ்ம ஆரத்தி'யில் வீரர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். வீரர்கள் பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் அங்கவஸ்திரம் அணிந்து இந்திய கிரிக்கெட் அணியின் ஊழியர்களுடன் பங்கேற்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்