கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி குறித்து இர்பான் பதானின் பதிவிட்ட இதயப்பூர்வமான பதிவு சமூக ஊடகங்களில் மக்களின் இதயங்களை வென்றது.
தற்போது, தற்போது 2023 ஆம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், கடந்த புதன்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கிடையே போட்டி நடைபெற்றது. இந்த மோதலுக்குப் பிறகு, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி ஆல்ரவுண்டரான இர்பான் பதான், எம்எஸ் தோனி-க்கு ஒரு இதயப்பூர்வமான செய்தியைப் பதிவு செய்தார். அதில் அவர், “நாங்கள் சந்தித்த மற்றும் எங்கள் பழைய நாள்களை நினைவில் கொள்ளாத நேரமே இருந்ததில்லை. நாம் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் சில வேடிக்கையான நினைவுகள் மீண்டும் வாழ்க்கையில் வருகின்றன” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது டெல்லி கேபிடள்ஸை 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, ஐபிஎல் பிளே-ஆஃப் நோக்கி பயணிப்பதற்கு ஒரு முன்னேற்றத்தை எட்டியது. இதில் ஆட்டம் ஆடிய சமயத்தில் தோனி நொண்டுவதைக் கண்டுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த இர்பான் பதான் வருத்தமடைந்தார். “விக்கெட்டுகளுக்கிடையே தோனி நொண்டி ஓடுவதைப் பார்க்கும் போது என் இதயம் உடைகிறது. அவர் சிறுத்தை போல ஓடுவதைப் பார்த்திருக்க்றேன்” என ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீட் ஆனது, நிறைய மக்களின் லைக்குகளைப் பெற்றுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…