பங்களாதேஷ் அணியின் ஆல்-ரவுண்டர் சகீப் அல் ஹஸன் ஐபிஎல் 2023 இல் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2023 இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 1.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார் சகீப் அல் ஹஸன். ஆனால் தற்போது தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறுவதாக கூறியுள்ளார். IPL தொடரின் விதிமுறைப்படி ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் தொடர் முடியும் வரை வெளியேறுவதற்கு அனுமதி இல்லை. ஆனால் இவரின் திடீர் அறிவிப்பிற்கு பின்னர் நிஜமாகவே அவர் தொடரில் இருந்து வெளியேறிவிட்டாரா அல்லது இவருக்கு பதில் மற்றொரு வீரரை KKR களமிறக்குமா உள்ளிட்ட விவரங்கள் இன்னும் வெளியாக வில்லை.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…