கே.எல் ராகுல் தனது உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதால், ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பை ஏற்க உள்ளார். மேலும் ஷிகர் தவான் இந்த தொடரில் துணை கேப்டனாக இருப்பார்.
கே.எல்.ராகுல் காயம் மற்றும் கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் கடந்த சில மாதங்களாக இந்திய அணியில் விளையாடவில்லை.
இந்நிலையில், தற்போது பிசிசிஐ மருத்துவக் குழு கேஎல் ராகுலை மதிப்பீடு செய்து, ஜிம்பாப்வேயில் நடக்கவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட அவரை அனுமதித்துள்ளது. அகில இந்திய மூத்த தேர்வுக் குழு அவரை அணியின் கேப்டனாக நியமித்து, ஷிகர் தவானை துணைத் தலைவராக நியமித்துள்ளது என பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே இடையிலான முதல் போட்டி ஆகஸ்ட் 18 ஆம் தேதியும், 2வது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 20 ஆம் தேதியும், 3வது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 22 ஆம் தேதியும் ஜிம்பாப்வேவின் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடக்க உள்ளது.
இந்திய அணி : கே.எல்.ராகுல் (கேப்டன்) ஷிகர் தவான் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அக்சர் படேல், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், தீபக் சாஹர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…