Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மலேசியா ஓபன் பேட்மிண்டன் : காலிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீரர்!!

Sekar Updated:
மலேசியா ஓபன் பேட்மிண்டன் : காலிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீரர்!!Representative Image.

மலேசிய ஓபன் ரவுண்ட்-16 இல் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய் இந்தோனேசியாவின் சிகோ ஆரா டிவி வார்டோயோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஒரு மணி நேரம் நான்கு நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் பிரணாய் 21-9, 15-21, 21-16 என்ற செட் கணக்கில் டிவி வார்டோயோவை வீழ்த்தினார்.

முன்னதாக, முந்தைய சுற்றில், பிரணாய் 22-24, 21-12, 21-18 என்ற செட் கணக்கில் 10வது இடத்தில் உள்ள சகநாட்டவரான லக்ஷ்யா சென்னை வீழ்த்தி தனது புதிய உலக நம்பர்.8 அந்தஸ்துக்கு முன்னேறினார். இந்த ஆட்டமும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சென்றது.

பிரணாய் காலிறுதியில் மலேசியாவின் ங் த்சே யாங் அல்லது ஜப்பானின் கோடை நரயோகவை எதிர்கொள்வார்.

முன்னதாக, காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 13-21, 21-15, 17-21 என்ற செட் கணக்கில் பல்கேரியாவின் கேப்ரியேலா ஸ்டோவா, ஸ்டெபானி ஸ்டோவா ஜோடியிடம் பெண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்தது.

அடுத்த வாரம் நடைபெறும் இந்தியா ஓபன் சூப்பர் 750 போட்டியில் ட்ரீசா மற்றும் காயத்ரி பிரான்ஸ் ஜோடியான மார்கோட் லம்பேர்ட் மற்றும் ஆன் ட்ரானை சந்திக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்