Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரோகித் சர்மாவுக்கு காயம்.. அரையிறுதி ஆட்டத்தில் ஆடுவாரா?

Gowthami Subramani November 08, 2022 & 12:25 [IST]
ரோகித் சர்மாவுக்கு காயம்.. அரையிறுதி ஆட்டத்தில் ஆடுவாரா?Representative Image.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது அரை இறுதி ஆட்டம், நாளை மறுநாள் அதாவது நவம்பர் 10 ஆம் நாள் நடைபெற உள்ளது.

இதில், ரோகித் சர்மா கேப்டனாக பதவி வகிக்கிறார். இவரது தலைமையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி மோத உள்ளது.

இந்த போட்டிக்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பயிற்சி நடைபெற்ற நேரத்தில், கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டது. இதில், வலை பயிற்சி செய்யும் போது அவரது வலது முன்னங் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த காயத்தால் வலியால் துடித்த அவர், பயிற்சியை விட்டு வெளியேறினார்.

பிறகு, அவரது கைக்கு ஐஸ் கட்டி வைக்கப்பட்டது. அதன் பிறகு, அவருடன் பயிற்சி குழுவைச் சேர்ந்த பேடி அப்டன் அவரது காயம் குறித்து விசாரித்து கொண்டிருந்தார். பிறகு, ரோகித் சர்மாவின் காயத்தின் தன்மை குறித்து பின்னரே ஆய்வு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த காயத்தால் ரோகித் சர்மா இங்கிலாந்து எதிரான அரை இறுதிப் போட்டியில் கலந்து கொள்வாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து போட்டி நடக்க இன்னும் 48 மணி நேரம் இருப்பதால், அதற்குள் காயத்தில் இருந்து குணமடைந்து விடுவார் என கிரிக்கெட் அணி நிர்வாகம் கருதுகிறது. மேலும், இவரது காயம் குறித்து மருத்துவக் குழு ஆய்வு செய்த பிறகே தெரிய வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில், ரோகித் சர்மா விளையாடாமல் இருந்தால், அது அணிக்கு மிகப்பெரிய இழப்பாக மாறும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்