இந்தியாவின் டென்னிஸ் நட்சத்திர வீராங்கனைகளில் ஒருவரான சானியா மிர்சா தனது அதிகாரபூர்வ ஓய்வை அறிவித்துள்ளார்.
ஒற்றையர் டென்னிஸ் விளையாட்டில் பல பதக்கங்களை பெற்ற சானியா 2013 ஆம் ஆண்டு அதில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பின்னர் மகளிர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் தலா 3 என மொத்தம் 6 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். இப்படியாக டென்னிஸ் விளையாட்டால் இந்தியாவிற்கு பெருமை தேடித் தந்துள்ளார் சானியா.
துபாயில் நடைபெற்று வரும் WTA துபாய் டூட்டி ஃப்ரீ சாம்பியன்ஷிப் தொடர் சானியா பங்கேற்று விளையாடும் கடைசி தொடர் என அறிவிக்கப்பட்டது. அதே போல அமெரிக்கா வீரர்களுடன் விளையாடும் இந்தப் போட்டியின் முதல் சுற்றில் 4-6, 0-6 என புள்ளிகள் எடுத்து தோல்வியை தழுவினார் சானியா. எனவே, இதுவே கடைசி ஆட்டம் என்று தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…