சாதனைகளை முறியடிப்பதில் வல்லவரான இந்திய நட்சத்திரம் சூர்யகுமார் யாதவ் தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஐசிசி ஆடவர் டி20 பேட்டிங் தரவரிசையில் எந்த இந்திய வீரரும் செய்யாத சாதனையை செய்து அசத்தியுள்ளார்.
டி20 தரவரிசையின் சமீபத்திய புதுப்பிப்பில், சூர்யகுமார் யாதவ் 883 ரேட்டிங் புள்ளிகளில் இருந்து 908 புள்ளிகளுக்கு முன்னேறி முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.
இதற்கு முன்பாக ஐசிசி டி20 தரவரிசையில் 900 புள்ளிகளை கடந்த ஒரே வீரர் இங்கிலாந்தின் டேவிட் மலன் ஆவார். அவர் மிக அதிகபட்சமாக 915 புள்ளிகளை எடுத்துள்ளார். அவரை விட ஏழு ரேட்டிங் புள்ளிகள் பின்தங்கியுள்ளார்.
சூர்யகுமார் யாதவு மற்றும் டேவிட் மலனுக்கு அடுத்தபடியாக, அதிகபட்ச புள்ளிகள் எடுத்த வீரர்களாக பாபர் ஆசம் (896), விராட் கோலி (897) மற்றும் ஆரோன் பின்ச் (900) ஆகியோர் உள்ளனர்.
சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் விளையாட நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. 30 வயதிற்குப் பிறகு தான் இந்திய அணியில் டி20 தொடரில் அறிமுகமானார். ஆனால் அவர் இதுவரை கண்டிராத வேகத்தில் தொடர்ந்து ரன்களை குவித்ததால் அவர் அசுர வளர்ச்சி கண்டார்.
45 டி20 போட்டிகளில், சூர்யா 180.34 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 1578 ரன்களைக் குவித்துள்ளார். இது 250 டி20 ரன்களுக்கு மேல் எடுத்த எந்தவொரு பேட்டருக்கும் அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட் ஆகும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…