திறமைக்கு வயது முக்கியம் இல்லை என்பதை நிரூபித்து காட்டியுள்ளார் 79 வயதான இந்திய தொழில்நுட்ப வல்லுநர் அசோக் சூட்டா. இவர் இந்திய தொழில்நுட்ப துறையில் பல காலமாக பணிபுரிந்து, மூன்று முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தலைமை தாங்கி, அவற்றில் ஏற்கனவே இரண்டை ஐபிஓ மூலம் பொது மக்களின் கவனத்தை ஈர்த்த சாதனைக்குரியவர். தற்போது, மூன்றாவது ஸ்டார்ட்அப்பாக ‘ஹேப்பியெஸ்ட் ஹெல்த்’ என்ற நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இது ஒரு உலகளாவிய சுகாதார மற்றும் ஆரோக்கிய அறிவு நிறுவனமாகும்.
மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய நடைமுறைகளை இணைக்கும் சிகிச்சையை மக்களுக்கு அறிமுகம் செய்யும் தனது புதிய முயற்சியானது அடுத்த 6-7 ஆண்டுகளில் ஐபிஓ -க்கு எடுத்துச் செல்லும் என்று அவர் உறுதிபட தெரிவித்துள்ளார். புதியதாக ஆரம்பிக்கபட்ட இந்த ஸ்டார்ட்அப்பில் டாக்டர்கள், டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மற்றும் முன்னாள் பத்திரிகையாளர்கள் என மொத்தம் 91 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்த ஸ்டார்ட்அப்பிற்கான செலவு மொத்தமும் தனது மற்றும் தன்னுடைய குடும்பத்தின் நிதி மட்டுமே பயன்படுத்தபடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…