ஆன்லைனில் வாங்குவது விற்பதும் நம் வாழ்வின் இன்றியமையாத அங்கமாகிவிட்டது. அற்புதமான ரிட்டர்ன் பாலிசிகள் மற்றும் உத்தரவாதங்களுடன் மலிவு விலையில் பொருட்களை வாங்குவதற்கு ஆரம்ப காலத்தில் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் இணையத்தை நம்பியிருந்தனர். அதுமட்டுமல்லாமல், அப்போது ஆன்லைன் ஷாப்பிங் என்பது ஒரு ட்ரெண்ட் ஆக இருந்தது.
ஆனால், இந்த காலத்தில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது என்பது ஒரு ட்ரெண்ட் மட்டும் அல்ல, இளைஞர்களும் முதியவர்களும் ஈடுபடும் ஒரு நடைமுறை ஆகிவிட்டது. இந்தியாவில் மிகவும் பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் தளம் என்று சொன்னால், Flipkart இன் பெயர் தான் முதலில் வரும்.
அந்த அளவிற்கு ஃப்ளிப்கார்ட் நம்மில் கலந்துவிட்டது. தற்போது உலகின் முதன்மை மற்றும் பிரலமான ஆன்லைன் ஷாப்பிங் தளமான ஃப்ளிப்கார்ட் 2007 ஆம் ஆண்டு பின்னி பன்சால் மற்றும் சச்சின் பன்சால் ஆகியோரால் நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தின் தலைமையகம் பெங்களூரில் அமைந்துள்ளது. இந்த இந்திய இ-காமர்ஸ் ஸ்டோர் இந்திய ஈ-சில்லறை வர்த்தகத்தில் ஒரு புரட்சியைக் கொண்டு வந்துள்ளது.
இவ்வளவு ஃபேமஸான ஆன்லைன் ஷாப்பிங் தளத்தின் நிறுவனர்கள், துணை நிறுவனங்கள், வருவாய் மற்றும் பலவற்றைப் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
2007 ஆம் ஆண்டு சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் ஆகியோரால் நிறுவப்பட்ட இந்திய இ-காமர்ஸ் நிறுவனம் தான் ஃப்ளிப்கார்ட். மேலும், ஃப்ளிப்கார்ட் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அமேசான் போன்ற நிறுவனங்கள் தான் ஆன்லைனில் விற்பனை செய்து அதிக வருவாய் ஈட்டி வந்தன. ஆனால், அமெரிக்க சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் (Walmart) 2018 ஆம் ஆண்டு மே மாதம் ஃப்ளிப்கார்ட்டை 16 மில்லியன் டாலருக்கு வாங்கியது, அதன்பிறகு தான் இந்த தளத்தின் மதிப்பும் புகழும் உயர தொடங்கியது.
ஆரம்ப காலத்தில், ஃப்ளிப்கார்ட் வீட்டுக்கு வீடு சென்று புத்தகங்களை டெலிவரி செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தது, ஆனால் இன்று எலக்ட்ரானிக்ஸ், ஃபேஷன், வீட்டிற்கு தேவையான பொருட்கள், மளிகை பொருட்கள் மற்றும் வாழ்க்கை முறை தயாரிப்புகள் போன்ற அனைத்து பொருட்களையும் விற்பனை செய்துவருகிறது. இதுவரை 1 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் Flipkart ஐப் பயன்படுத்தி ஷாப்பிங் செய்துள்ளனர், இதன் மூலம் இ-காமர்ஸ் நிறுவனத்தை இந்தியாவின் முன்னணி இ-சில்லறை விற்பனையாளராக மாற்றியுள்ளது.
ஐஐடி-டெல்லி பட்டதாரிகளான பின்னி பன்சால் மற்றும் சச்சின் பன்சால் ஆகியோர் அமேசான் நிறுவனத்தில் ஊழியர்களாக இருந்தபோது, அவர்கள் இந்தியாவில் தனங்களுக்கென சொந்த நிறுவனத்தை உருவாக்க நினைத்தனர். அப்போது உருவானது தான் உலகின் டாப் ஆன்லைன் தளமான நம்ம ஃப்ளிப்கார்ட்.
தொழில் துவங்கும் யோசனை வந்தாலும், ஆரம்பத்தில் அவர்களுக்கு இ-காமர்ஸ் பற்றிய சிந்தனை எதுவும் தோன்றவில்லை. இதனையடுத்து சச்சினும் பின்னியும் பெங்களூர் கோர்மங்களா பகுதியில் ஒரு சின்ன வீட்டிலிருந்து ரூ.4,00,000 நிதியுதவியுடன் ஃப்ளிப்கார்ட்டை ஆன்லைன் புத்தகக் கடையாகத் தொடங்கினார்கள்.
பல தோல்விகளுக்கு பின்பு 2007 ல் புத்தங்களை விற்பனை செய்வதில் சச்சின் மற்றும் பின்னி பெரிய வெற்றியை பெற்றனர், அதன்பிறகு தான் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், போன்கள், கேம்ஸ், மியூசிக், சினிமா என பல பிரிவுகளில் விற்பனை செய்ய முடிவு செய்தனர். இதன் மூலம் 1 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டி 2014 ஆம் ஆண்டில் இந்தியாவின் இரண்டாவது யூனிகார்னாக உருவெடுத்தது.
ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் ஃப்ளிப்கார்ட்டை நிறுவியபோது, இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் அவர்களுக்கு தொலைதூரக் கனவாகவே இருந்தது. ஆனால், கடின உழைப்பும், விடா முயற்சியும் அவர்களை வெற்றிகரமான தொழில்முனைவோராக மாற்றி, ஃபிளிப்கார்ட்டை இந்திய ஸ்டார்ட்அப் வரலாற்றில் ஒரு சரித்திரத்தை படைக்க உதவியது.
இரண்டு அறை அபார்ட்மெண்ட்டில் தொடங்கப்பட்ட ஃப்ளிப்கார்ட், இன்று பெங்களுரு நகரில் 8.3 லட்ச சதுர அடியில் பிரம்மாண்ட அலுவலகம், இந்தியா முழுவதும் கிளைகள், பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை கொண்டுள்ளது.
இன்று, ஃப்ளிப்கார்ட் 100 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயனர்களையும், 100 ஆயிரம் விற்பனையாளர்களையும், ஒரு மாதத்திற்கு சுமார் 8 மில்லியன் ஏற்றுமதிகள், மற்றும் சுமார் 10 மில்லியன் டெய்லி பேஜ் விசிட்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஃப்ளிப்கார்ட் தற்போது வால்மார்ட்டின் துணை நிறுவனமாக செயல்படுகிறது. மேலும், ஃப்ளிப்கார்ட் குழுமத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியாக கல்யாண் கிருஷ்ணமூர்த்தி விளங்குகிறார். ஃப்ளிப்கார்ட் நிறுவனமானது,
போன்ற துணை நிறுவனங்களையும் (Flipkart's Subsidiaries) கொண்டுள்ளது. மேலும், ஜூலை 2, 2021 அன்று ஷாப்சியை (Shopsy) அறிமுகப்படுத்தியது, இது நாட்டின் தொழில்முனைவோரை முதலீடுகள் இல்லாமல் வரும் டிஜிட்டல் இணையவழி வணிகத்தின் அனைத்து நன்மைகளையும் அறுவடை செய்ய ஊக்குவிக்கும் ஒரு செயலியாக செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய ஃபேஷன் தளமாக விளங்கும் Myntra ஒரு முழுமையான துணை நிறுவனமாக Flipkart உடன் தொடர்ந்து செயல்படுகிறது; இந்த தளமானது ஃபேஷன் சந்தையில் கவனம் செலுத்துகிறது, அதே நேரத்தில் Flipkart முக்கிய சந்தை மற்றும் முக்கிய சர்வதேச பிராண்டுகளிலும் கவனம் செலுத்துகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…