இந்தியாவின் மிகப் பெரிய ஆன்லைன் கல்வி ஆப் (Edtech) நிறுவனம் பைஜூஸ். இந்த நிறுவனத்தில் ஏற்கனவே 20 ஆயிரம் ஆசியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா காலத்தின் போது லாபத்தை அள்ளிய பைஜூஸ், தற்போது பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. எனவே, முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் மீதான தனது பொறுப்பை உணர்ந்து, வலுவான வருவாய் வளர்ச்சியுடன் நிலையான வளர்ச்சியை பெற பைஜூஸ் திட்டமிட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக ஒரே வேலையை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் செய்வதைக் குறைத்து தொழில்நுட்பத்தைச் சிறப்பாக மேம்படுத்துவதற்காக 50 ஆயிரம் ஊழியர்களில் இருந்து 5 சதவீதத்தினரைப் பணி நீக்கம் செய்யும் முடிவை பைஜூஸ் எடுத்துள்ளது.
இதன் மூலம் வரும் ஆன்லைனில் மேலும் சிறப்பான வளர்ச்சியை பெற மார்க்கெட்டிக்கிற்கான செலவு அதிகரிக்க பைஜூஸ் முடிவு செய்துள்ளது. இந்த நடவைக்கைகள் அடுத்த ஆண்டு லாபத்தை அடைய உதவ உதவும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஒருபக்கம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தாலும், 10,000 கணக்கான ஆசிரியகளை பணிக்க எடுக்க உள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…