Fareye Layoffs: புது டெல்லியை சேர்ந்த சாஸ் லாஜிஸ்டிக்ஸ் ஸ்டார்ட்அப் ஃபார்ஐ, இந்த வாரம் சுமார் 250 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இந்த பணிநீக்கம் அதன் இந்திய, ஐரோப்பா, வட அமெரிக்கா அலுவலங்களில் உள்ள ஊழியர்களை பாதித்துள்ளது.
ஸ்டார்ட்அப் ஆனது புரோடெக்ட், என்ஜினியரிங், புரொஃபஸ்னல் சர்வீஸ், குவாலிட்டி அனலிசிஸ்ட்ஸ், சேல்ஸ், டெவலப்பர்ஸ் போன்றவற்றிலிருந்து பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
இந்த நிறுவனத்தில் இதுவரை 750 க்கும் அதிகமான பணியாளர்கள் வேலை செய்து வந்துள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, பணியாளர்கள் அப்ரைசலை எதிர்பார்க்கும் நேரத்தில் வேலையை விட்டு வெளியேற்றியுள்ளனர்.
பணியாளர் அந்தந்த மேலாளர்களால் ஒவ்வொருத்தராக அழைக்கப்பட்டு, பணிநீக்கம் பற்றி தெரிவிக்கப்பட்டனர். இதை சிறிதும் எதிர்ப்பார்க்காத ஊழியர்கள் அதிர்ச்சியில் திகைத்து போய்விட்டார்களாம்.
அதோடு, இந்த பணிநீக்கம் நிறுவன மறுசீரமைப்பு காரணமாகவே தவிர, உங்களுடைய செயல்திறனின் அடிப்படையில் கிடையாது என்று பாதிகப்பட்ட ஊழியர்களுக்கு மேலாளர்கள் அறிவுறுத்தினர். ஆனால், உண்மையான காரணம் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை.
மேலும், பாதிகப்பட்ட ஊழியர்களுக்கு இரண்டு மாத சம்பளத்தை செலுத்தவும் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…