கடின உழைப்பு வெற்றிக்கு இன்றியமையாத ஒரு தகுதி. ஆனால், கடினமாக உழைக்கும் அனைவரும் வாழ்க்கையில் வெற்றி அடைந்துவிடுவதில்லை. வியாபாரிகள், கூலி தொழிலாளிகள் என நம் அன்றாட வாழ்க்கையில் பல வகையான மனிதர்களை பார்க்கிறோம். அவர்கள் நம் அனைவரை விடவும் தினமும் பல நேரம் அதிகமாகவும் கடினமாகவும் உழைக்கின்றார்கள். ஆனால், அவர்களில் மிகச் சிலர் மட்டுமே அவ்வாழ்க்கையில் இருந்து அடுத்த கட்டத்திற்கு நகருகின்றார்கள். மீதி இருக்கும் அனைவரும் கடினமாக உழைத்தே தங்களது வாழ்க்கையை கடத்துக்கின்றார்கள்.
எனவே நாம் வெற்றி என்னும் இலக்கை அடைக்குவதற்கு கடின உழைப்பு ஒன்று மட்டுமே போதாது. அதையும் தாண்டி ஏதோவொரு திறமை நம்மிடம் இருக்க வேண்டும். அத்திறமை என்னவென்ற கேள்வி இங்கு பலரது மனதிலும் குடிக்கொண்டிருக்கின்றது. அந்த கேள்விக்கு மிகவும் திறமையான பதிலை நம்மிடம் கூறுகிறார் உலகின் பிரபல முதலீட்டாளரான வாரன் பஃபெட் 'Warren Buffett'.
பணம் நம் வாழ்வின் மிக மிக முக்கியமானதரொரு அம்சமாகும். அது நம் வாழ்வை மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்கு வழிக்வகுத்து தருகிறது. ஆனால், வாழ்வில் நீங்கள் மிகச்சிறந்த வெற்றியை அடைய விரும்பினால் என்றும் பணத்தின் பின்னால் ஓடாதீர்கள். பணம் சம்பாதிப்பதில் மட்டும் உங்களது பொன்னான நேரத்தை வீணடிக்காதீர்கள்.
மாறாக உங்கள் மனதில் இருக்கும் கனவுகளை தட்டி எழுப்புங்கள். உண்மையிலேயே நீங்கள் யாராக வர விரும்புகிறீர்கள் என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கான இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அந்த இலக்கை நோக்கி உழைக்க ஆரம்பியுங்கள்.
அதன் பின்னர் நீங்கள் நினைத்தாலும் நிறுத்த முடியாத அளவிற்கு பணத்தை சம்பாதிக்க ஆரம்பிப்பீர்கள். எனவே, என்றும் பணத்தின் பின்னால் செல்லாதீர்கள். பணத்தினை உங்களின் பின்னால் எப்படி வரவழைப்பது என்று சிந்தியுங்கள்.
உழைக்க வேண்டும் என்பதற்காக கண்மூடித்தனமாக உழைக்காமல், உங்களது இலக்குகளை அடைவதற்கு தேவையான உழைப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அப்போது உங்களிடம் பணமும் இருக்கும், வாழ்க்கையை அனுபவித்து வாழ நேரமும் இருக்கும். அந்த ஓய்வு நேரம் உங்கள் மனதில் மேலும் பல புதிய திட்டங்களை உருவாக்கும்.
Also Read: ஏழ்மையும் நிரந்தமில்லை என்று உலகிற்கு உணர்த்தியவர்கள்.. பிரம்மிக்க வைக்கும் உண்மை தகவல்கள்..
இரண்டாவது, உங்களுக்காக அடுத்தவர்களை உழைக்கச் செய்வது எவ்வாறு என்பதை கண்டறியுங்கள். நிச்சயம் உங்கள் இலக்குகளை தேவையான அனைத்து முயற்சிகளையும் நீங்களே உங்களது கைகளினால் செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. உங்களது தேவைகளை பிறரை வைத்து பூர்த்தி செய்து கொள்வது எவ்வாறு என்ற அறிவு உங்களிடம் இருக்க வேண்டும்.
மூன்றாவது, என்றும் எவரிடமும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் முனையாதீர்கள். உங்களது கனவுகளை அடைய எதை செய்ய வேண்டுமோ, அதை செய்வது மட்டுமே உங்களது வேலை. மாறாக, உங்கள் முயற்சிகளை பிறர் அங்கீகரிக்க வேண்டும், உங்களை பாராட்ட வேண்டுமென்று நீங்கள் எண்ணினால், அந்த அங்கீகாரத்தை பெறவதற்காக பல தேவையற்ற வேலைகளில் உங்களது நேரத்தை வினையம் செய்ய வேண்டி இருக்கும்.
உண்மையிலேயே, வாழ்வில் நீங்கள் ஒரு உறுதியான வெற்றியை அடைய விரும்பினால் உங்களை நோக்கி அடுத்தவர்கள் வீசும் விமர்சங்களை சகித்துக்கொண்டு உங்கள் இலக்குகளில் மட்டும் குறிவைத்து முன்னேறும் மனஉறுதி இருக்க வேண்டும். நிச்சயம் அந்த மனஉறுதியினால் மட்டுமே உங்களை ஒரு வெற்றியாளனாக மாற்ற முடியும்.
என்றும் ஒன்றை மறந்துவிடாதீர்கள் வாழ்வில் நீங்கள் எந்த முயற்சி செய்வதாக இருந்தாலும் அதில் உங்களுக்கென ஒரு பாதுகாப்பு வளையம் இருக்க வேண்டும். அவ்வளையம் தேவையற்ற தோல்விகளில் இருந்து உங்களை தடுக்க வேண்டும். உங்களால் எது முடியும், எது முடியாது என்பதை தெளிவாக அறிந்துக் கொள்வதன் மூலம் அவ்வளையத்தை உருவாக்கிவிட முடியும்.
நிச்சயம் ஒரு 50 கிலோ மனிதனால் 500 கிலோ எடையுள்ள பொருளை தூக்கிவிட முடியாது. ஆனால், அப்படி ஒரு முயற்சியை நீங்கள் செய்பவர்களாக இருந்தால் அதில் உங்களுக்கு வெறும் இழப்புகளே எஞ்சும். அந்த இழப்புகளை சரிசெய்வதில் உங்களது பணம், நேரம், உழைப்பு என்ற அனைத்துமே வீணாகிவிடும். எனவே, அத்தவறை செய்யாமல் தொடர்ந்து முன்னேறி கொண்டே இருங்கள்.
இந்த யுக்தியையே எனது இளமை காலத்தில் இருந்து பின்பற்றி வருகிறேன். இதுவே, இத்தனை பெரியதொரு செல்வத்தை உருவாக்கி கொடுத்தது என்கிறார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…