வரும் டிசம்பர் 8 ஆம் தேதி ஏலியன்கள் நமது பூமியில் கால் பாதிக்கலாம் என்று டைம் ட்ராவேலர் வெளியிட தகவல் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பூமியில் ஏலியன்கள் இருக்கின்றார்களா? நாம் அவர்களை பார்த்திருக்கிறோமா? முதலில் ஏலியன்ஸ் என்ற ஒன்று உள்ளதா? என்று நமக்கு பல கேள்விகள் இருக்கிறது. என்ன தான் அதற்கான பதில்கள் முழுமையாக கிடைக்கவில்லை என்றாலும், திரைப்படங்கள் நமக்கு ஒரு சில விஷயங்களை கற்றுக்கொடுக்கிறது. அப்படியாக சமீபத்தில் நமக்கு கிடைத்த அதிர்ச்சிகரமான தகவலைப் பற்றி பார்க்கலாம்.
தன்னைத்தானே "டைம் ட்ராவேலர்" என்று அறிவித்துக் கொண்டவர் தான் டிக்டோக் பயனாளர் ஏனோ அலரிக். இவர் சமீபத்தில் டிக்டாக்கில் வெளியிட்ட பதிவு ஒன்று உலகில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் அவர் சொன்னது, " கவனம்! ஆம், நான் 2671 ஆம் ஆண்டு ரியல் டைம் ட்ராவேலர், வரவிருக்கும் இந்த ஐந்து தேதிகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
1. வரும் நவம்பர் 30 ஆம் தேதி பூமியைப் பின்பற்றும் கிரகம் ஒன்றை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.
2. இந்த வருடம் டிசம்பர் 8 ஆம் தேதி டிசம்பர் 8 ஆம் தேதி ஒரு மாபெரும் விண்கல்லில் வேற்றுகிரகவாசிகள் பூமியில் தரையிறங்கலாம் என்றுள்ளார்.
3. அடுத்தது பிப்ரவரி 6, 2023 ஆம் ஆண்டு டீனேஜர்கள் குழு மற்ற விண்மீன் திரள்களுக்கு (galaxies) வார்ம்ஹோலைத் (wormhole) திறப்பதற்கான சாதனத்தைக் கண்டுபிடிப்பார்கள் என்றார்.
4. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில், மரியானா அகழியில் ஒரு பழங்கால இனம் கண்டுபிடிக்கப்படும் என்று அலரிக் கணித்துள்ளார்.
5. அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் வசிப்பவர்கள், குறிப்பாக சான் பிரான்சிஸ்கோவில் 750 அடி மெகா சுனாமியால் பாதிக்கப்படுவார்கள் என்று அவரது கடைசி தீர்க்கதரிசனம் கூறியது.
தான் டைம் ட்ராவேலர் என்று கூறும் இந்த நபர் உண்மையா? இவர் கூறியது போலவே அந்த இந்து நாட்களில் இவையெல்லாம் நடக்குமா? இதை நம்புவதா இல்லையா? என்று தெரியவில்லை. இத பாத்தா அப்படியே மார்வெல் படத்தை பிட் அடிச்ச மாறியே இருக்கும் போலையே. இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…