சவுதி அரேபியாவில் இதற்கு முன்பாக ஒரு கண்ணாடி நகரம் ஒன்று தயாராகி வரும் நிலையில் இப்பொழுது புதிதாக ஒரு கப்பல் உருவாகவுள்ளது எனத் தகவல் வந்துள்ளது. இது 200 முதல் 300 மில்லியன் வருடங்களுக்கு முன்பாக வாழ்ந்த கண்டத்தின் நினைவாக இந்த கப்பல் நகரத்திற்கு பாஞ்சியோஸ் எனப் பெயர் சூட்டினார்கள். இது மற்ற கப்பல்களை விட இது ஒரு புதுவிதமான கப்பல். இது கடலில் நிற்காமல் மிதக்கும் வடிவில் தயாரிக்கப்பட உள்ளது.
✤ இந்த கப்பலைப் பார்க்கும் போது ஒரு ஆமை வடிவில் உள்ள இந்த கப்பலை வடிவமைக்க இத்தாலி நாட்டை சேர்ந்த லஸ்ஸாரினி என்ற கட்டுமான நிறுவனம் இந்த கட்டமைப்பை வடிவமைத்துள்ளது. அந்த நிறுவனம் இந்த கப்பலை 8 வருடத்தில் கட்டி முடிக்கவுள்ளது.
✤ இதில் மற்ற கப்பல் போல் இல்லாமல் அனைத்து வசதிகளும் உள்ளது. இந்த கப்பலைக் கட்டுவதற்கு 65 ஆயிரம் கோடி செலவு செய்து கட்டப்பட உள்ளது. அப்படி இந்த கப்பலில் என்ன உள்ளது எனப் பார்க்கலாமா.
✤ இந்த கப்பலின் வடிவமைப்பு ஆமை போல் இருந்தாலும் இதனின் நீளமானது 1800 அடி மற்றும் அகலமானது 2000 அடி கொண்டது. இதில் ஒரே நேரத்தில் 60 ஆயிரத்திற்கு மேல் பயணம் செல்ல முடியும்.
✤ இந்த கப்பலில் மால்கள் மற்றும் பூங்கா போன்றவை பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளது. இதில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகளவில் கட்டப்பட உள்ளது.
✤ இந்த கப்பலில் பொழுதுபோக்கிற்கு என பீச் மற்றும் கிளஃப் எனப் பல உள்ளது. இந்த ஆமை வடிவத்தில் உள்ள மிதக்கும் நகரத்தில் ஆமையின் இறக்கைகளில் 19 வில்லாக்கள் மற்றும் 64 அடுக்குமாடிக் குடியிருப்புகள் எனச் சகல வசதிகளும் கொண்ட கப்பல் ஆகக் கட்டப்பட உள்ளது.
✤ இந்த கப்பலுக்குத் தேவையான மின் ஆற்றலைச் சூரிய மின்சக்தி மூலம் மற்றும் கடல் அலைகள் மூலம் இயற்கையான முறையில் எடுத்துப் பயன்படுத்த உள்ளது.
✤ இந்த கப்பல் மிகப் பிரம்மாண்டமாகக் கட்டப்பட உள்ளது. இந்த கப்பலின் கட்டுமான வேலை சவூதி அரேபியாவில் உள்ள சிங் அப்துல்லா எனத் துறைமுகத்தின் அருகே உள்ள கடற்பகுதியில் தொடங்க உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…