Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

27 Nakshatras in Tamil: இந்த கோயில்தான் உங்க வாழ்க்கையையே மாத்தப் போகுது!

Nandhinipriya Ganeshan March 21, 2022 & 16:09 [IST]
27 Nakshatras in Tamil: இந்த கோயில்தான் உங்க வாழ்க்கையையே மாத்தப் போகுது!Representative Image.

27 Nakshatras in Tamil: ஜோதிடத்தில் 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் உள்ளன. பொதுவாக, நாம் பிறக்கும் போது எந்த நட்சத்திரம் ஆதிக்கத்தில் உள்ளதோ அந்த நட்சத்திரத்தை தான் ஜென்ம நட்சத்திரம் என்று கூறுவார்கள். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தெய்வங்கள், மலர்கள் இருக்கின்றன. அந்தந்த நட்சத்திரக்கு உரியவர்கள் தங்களுக்குரிய நட்சத்திர தெய்வங்களோட ஆலயத்திற்கு செல்லும் போது நட்சத்திர மலர்களை பயன்படுத்தி வணங்கி வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெறுங்கள். இவ்வாறு உங்கள் நட்சத்திர தெய்வங்களை வழிபாடு செய்யும்போது நாடிய செல்வம் தேடி வரும், வெற்றி மேல் வெற்றி குவியும், எப்போதும் மனநிம்மதி கிடைக்கும். இதன் அடிப்படையில் 27 நட்சத்திரத்திற்குரிய தெய்வங்கள் மற்றும் கோயில்கள், மற்றும் மலர்களை பற்றி இங்கு தெரிந்துக் கொள்ளலாம். 

அஸ்வினி நட்சத்திரம் (Ashvini): அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ஆலயம் பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில். இந்த அற்புத திருக்கோயில் திருவாரூரில் இருந்து 30 கி.மீ தொலைவில் இருக்கும் திருத்துறைப்பூண்டியிலிருந்து உள்ளே ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இதேப்போல் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கூத்தனூரில் உள்ள கலைவாணி ஸ்ரீசரஸ்வதி ஆலயத்திற்கும், சென்று வழிபடலாம். இந்த ஆலயங்களுக்கு செல்லும் போது நீங்க வைத்து வழிபாடு செய்ய வேண்டிய நட்சத்திர மலர் "சாமந்தி". 

பரணி நட்சத்திரம் (Bharani): பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ஆலயம், அக்னீஸ்வரர் திருக்கோயில். இந்த ஆலயம் மயிலாடுதுறையில் இருந்து நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நல்லாடை என்ற ஊரில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்குச் செல்லும் போது நீங்க வைத்து வழிபாடு செய்ய வேண்டிய நட்சத்திர மலர் "முல்லை".

கார்த்திகை நட்சத்திரம் (Krittika): கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், அவசியம் வழிபட வேண்டிய ஆலயம் காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில். இந்த திருத்தலம் மயிலாடு துறையில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கி.மீ தூரத்தில் கஞ்சா நகரம் இருக்கிறது. இதன் மெயின் ரோட்டில் இருந்து பிரியும் சாலையில் 1/2 கி.மீ சென்றால் ஆலயத்தை காணலாம். இந்த ஆலயத்திற்குச் செல்லும் போது நீங்க வைத்து வழிபாடு செய்ய வேண்டிய நட்சத்திர மலர் "செவ்வரளி".

ரோகிணி  நட்சத்திரம் (Rohini): ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய திருத்தலம் பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில். இந்த திருக்கோயில் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள சாலையில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்குச் செல்லும் போது நீங்க வைத்து வழிபாடு செய்ய வேண்டிய நட்சத்திர மலர் "பாரிஜாதம், பவளமல்லி".

மிருகஷிரீஷம் நட்சத்திரம் (Mrigashirsha): ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ஆதிநாராயணப் பெருமாள் கோயில். இந்த திருத்தலம் தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 50கி.மீ தொலைவில் முகூந்தனூர் என்ற ஊர் உள்ளது. அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த திருத்தலம் அமைந்துள்ளது. "ஜாதி மல்லி" பூவை வைத்து வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும். 

திருவாதிரை (Ardra): திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசியம் வழிபட வேண்டியது அபய வரதீஸ்வரர் ஆலயம். இந்த திருத்தலம் தஞ்சாவூரிலிருந்து 70 கி.மீ தொலைவில் உள்ள பட்டுக்கோட்டைக்கு முதலில் சென்று, அங்கிருந்து 12 கி.மீ பயணித்தால் அதிராம்பட்டினம் என்ற ஊரில் உள்ளது. இந்த ஆலயத்திற்குச் செல்லும் போது நீங்க வைத்து வழிபாடு செய்ய வேண்டிய நட்சத்திர மலர் "வில்வம், வில்வப் பூ". 

புனர்பூசம் நட்சத்திரம் (Punarvasu): புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிதீஸ்வரர் ஆலயத்திற்கு செல்லும் போது நட்சத்திர மலரான "மரிக்கொழுந்து" வைத்து வழிபாடு செய்யுங்கள். இந்த திருத்தலம் வேலூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில் 67 கி.மீ தூரத்தில் வாணியம்பாடி உள்ளது. அங்கிருந்து 3 கி.மீ பழைய வாணியம்பாடி இருக்கிறது. 

பூசம் நட்சத்திரம் (Pushya): பூசம் நட்சத்திரத்தில் (pushya nakshatra in tamil) பிறந்தவர்கள் பட்டுக்கோட்டைக்கு அருகில் விளங்குளம் என்ற ஊரில் உள்ள ஸ்ரீ  அட்சய புரீஸ்வரர் ஆலயத்திற்கு (kadagam rasi natchathiram) சென்று வழிபடலாம். இந்த ஊர் பட்டுக்கோடையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 30 கி.மீ சென்றால் விளங்குளம் என்ற ஊர் வரும். அங்கிருந்து தெற்கே 2கி.மீ சென்றால் விளங்குளத்தை அடையலாம். மற்ற கோயில்களாவன திருச்சேறையில் உள்ள சாரபரமேஸ்வரர் திருக்கோயில் மற்றும் கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபடலாம். பூசம் நட்சத்திரத்திற்கான நட்சத்திர மலர் "தாமரை".

ஆயில்யம் நட்சத்திரம் (Ashlesha): இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், கடற்கடேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபட்டால் நன்மை உண்டாகும். இந்த ஆலயம் கும்பகோணத்திற்கு அருகில் திருத்தேவன்குடி என்ற ஊரில் உள்ளது. நட்சத்திர மலர் "செவ்வரளி".

மகம் நட்சத்திரம் (Magha): மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், மகாலிங்கேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சென்று வழிபடலாம். இந்த திருத்தலம் திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் 12 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள விராலிப்பட்டி விளக்கு என்ற ஊரில் உள்ளது. இந்த ஆலயத்திற்குச் செல்லும் போது நீங்க வைத்து வழிபாடு செய்ய வேண்டிய நட்சத்திர மலர் "மல்லிகை".

பூரம் நட்சத்திரம் (Purva Phalguni): பூரம் நட்சத்திரக்காரர்கள் ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். இந்த ஆலயம் புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கி.மீ தூரத்தில் உள்ள திருவரங்குளம் என்ற ஊரில் உள்ளது. நட்சத்திர மலர் "தாமரை".

உத்திரம் நட்சத்திரம் (Uttara Phalaguni): இந்த ராசிக்காரர் வழிபட வேண்டிய கோயில் மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில். இந்த திருத்தலம் திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாப்பில் இருந்து 27 கி.மீ தூரத்தில் இடையாற்று மங்கலம் என்ற ஊரில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்குச் செல்லும் போது நீங்க "கதம்பம்" மலரை வைத்து வழிபாடு வேண்டும்.

அஸ்தம் நட்சத்திரம் (Hasta): அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மயிலாடுதுறையில் (கோமல்) ஸ்ரீ கிருபாகூரேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபட வேண்டும். இந்த ஆலயத்திற்குச் செல்லும் போது நீங்க வைத்து வழிபாடு செய்ய வேண்டிய நட்சத்திர மலர் "வெண்தாமரை". 

சித்திரை நட்சத்திரம் (Chitra): சித்திரை நட்சத்திரக்காரர்கள் சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். இந்த ஆலயத்திற்கு செல்ல மதுரையில் இருந்து 23 கி.மீ தூரத்தில் உள்ள குருவித்துறைக்கு மதுரை பெரியார் பஸ் நிலையத்திலிருந்து பஸ் உள்ளது. இந்த கோயிலுக்குச் செல்லும் போது நீங்க "மந்தாரை" மலரை வைத்து வழிபாடு வேண்டும்.

சுவாதி நட்சத்திரம் (Swati): சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சென்னை-பூந்தமல்லி சாலையில் தண்டுரை என்ற ஊரில் இருந்து 8 கி.மீ தொலைவில் சித்துக்காடு என்ற ஊரில் உள்ள தாத்திரீஸ்வரர் திருக்கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்.  

விசாகம் நட்சத்திரம் (Vishakha): விசாகம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆலயம் முத்துக்குமாரசாமி திருக்கோயில். மதுரையில் இருந்து 155 கி.மீ தொலைவில் உள்ள செங்கோட்டையிலிருந்து 7கி.மீ தூரத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்குச் செல்லும் போது நீங்க "இருவாட்சி" மலரை வைத்து வழிபாடு வேண்டும்.

அனுஷம் நட்சத்திரம் (Anuradha): அனுஷ நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆலயம், மகாலட்சுமிபுரீஸ் வரர் திருக்கோயில். இந்த ஆலயம் மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கி.மீ தூரத்தில் திருநின்றியூர் ஊரில் உள்ளது. இந்த கோயிலுக்குச் செல்லும் போது நீங்க "செம்முல்லை" மலர் அல்லது செந்நிற மலர்களை வைத்து வழிபாடு வேண்டும். 

கேட்டை நட்சத்திரம் (Jyeshtha): தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ தூரத்தில் பசுபதிகோயில் உள்ளது. இந்த பஸ் ஸ்டாப்பில் இருந்து 1/2 கிலோ மீட்டர் தூரத்தில் வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு சென்று வழிபடுங்கள். இந்த கோயிலுக்குச் செல்லும் போது நீங்க "பன்னீர் ரோஜா" மலர்களை வைத்து வழிபாடு வேண்டும்.

மூலம் நட்சத்திரம் (Mula): சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கிலோமீட்டர் தூரத்தில் சிங்கீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த ஆலயத்திற்கு செல்லும்போது "வெண்சங்கு" நட்சத்திர மலரை வைத்து வழிபாடு செய்யலாம். 

பூராடம் நட்சத்திரம் (Purva Ashadha): பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய திருத்தலம் ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில். தஞ்சாவூரில் இருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கி.மீ தூரத்தில் கடுவெளி என்ற ஊரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. நட்சத்திர மலர் "விருட்சி" பூ. இந்த மலரை இட்லிப்பூ என்றும் சொல்வார்கள். 

உத்திராடம் நட்சத்திரம் (Uttara Ashadha): உத்திராட நட்சத்திரக்காரர்கள் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலுக்கு சென்று வழிபாடு செய்யலாம். பூங்குடி என்ற ஊரில் இந்த திருத்தலம் உள்ளது. இந்த ஊர் சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் 12 கி.மீ தூரத்தில் ஓக்கூர் உள்ளது. அங்கிருந்து பிரியும் சாலையில் 3 கி.மீ சென்றால் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலைச் சென்றடையலாம். இந்த ஆலயத்திற்கு செல்லும்போது "சம்பங்கி" நட்சத்திர மலரை வைத்து வழிபாடு செய்யலாம். 

திருவோணம் நட்சத்திரம் (Shrvana): திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், திருப்பாற்கடல் என்ற இடத்தில் இருக்கும் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபடுங்கள். வேலூரில் இருந்து சென்னை செல்லும் வழியில் காவேரிப்பாக்கத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு செல்லும்போது "ரோஜா" நட்சத்திர மலரை வைத்து வழிபாடு செய்யலாம். 

அவிட்டம் நட்சத்திரம் (Dhanishtha): அவிட்ட நட்சத்திரக்காரர்கள் பிரம்மஞானபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபடலாம். இந்த ஆலயம் கொருக்கை என்ற இடத்தில் உள்ளது. இந்த இடத்திற்கு கும்பகோணத்திலிருந்து முழையூர், தாராசுரம், வழியாக மருதாநல்லூர் செல்லும் பஸ்களில் செல்லலாம். இந்த ஆலயத்திற்கு செல்லும்போது "செண்பகம்" நட்சத்திர மலரை வைத்து வழிபாடு செய்யலாம். 

சதயம் நட்சத்திரம் (Shatabhisha): சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கி.மீ தூரத்தில் அக்னிபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபடலாம். இந்த ஆலயத்திற்கு செல்லும்போது "நீலோற்பவம்" நட்சத்திர மலரை வைத்து வழிபாடு செய்யலாம்.

பூரட்டாதி நட்சத்திரம் (Purva Bhadrapada): பூரட்டாதி நட்சத்திரகாரர்கள் திருவையாறில் இருந்து 17 கி.மீ தூரத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளியிலிருந்து அகரப்பேட்டை செல்லும் வழியில் 2கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் திருவானேஷ்வர் திருக்கோயிலில் உள்ள இறைவனை வழிபாடு செய்யுங்கள். இந்த திருத்தலத்திற்கு செல்லும் போது "வெள்ளரளி" நட்சத்திர மலரை வைத்து வழிபாடு செய்யுங்கள். 

உத்திரட்டாதி நட்சத்திரம் (Uttara Bhadrapada): உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், அவசியம் வழிபடவேண்டியது சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில். இந்த ஆலயமானது புதுக்கோட்டையில் இருந்து 61 கி.மீ தூரத்தில் தீயத்தூர் என்ற ஊரில் அமைந்துள்ளது. இந்த திருத்தலத்திற்கு செல்லும் போது உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் "நந்தியாவட்டம்" நட்சத்திர மலரை வைத்து வழிபாடு செய்யுங்கள். 

ரேவதி நட்சத்திரம் (Revati): இந்த ராசிக்காரர் வழிபட வேண்டிய கோயில் கயிலாயநாதர் ஆலயம். இந்த திருத்தலம் திருச்சியிலிருந்து கிட்டதட்ட 26 கிலோமீட்டர் தூரத்தில் காருகுடி என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த திருத்தலத்திற்கு செல்லும் போது ரேவதி நட்சத்திரக்காரர்கள் "செம்பருத்தி" நட்சத்திர மலரை வைத்து வழிபாடு செய்யுங்கள்.   

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் ஆலயங்களுக்கு வருடத்திற்கு ஒருமுறையாவது நீங்கள் சென்று தரிசித்து வருவது மிக மிக முக்கியமானது. மிக மிக நல்லதும் கூட. அதேப்போல், இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் நட்சத்திரத்திற்கான மலர்களை நீங்க எந்த ஆலயத்திற்குச் சென்றாலும் அவசியம் பயன்படுத்துங்கள். இந்த மலர்களை வீட்டு பூஜை அறை, அலுவலகம், வியாபார ஸ்தலங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் பயன்படுத்தலாம், இது மேலும் நல்ல பலன்களைத் தரும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்