இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றுக் காரணமாக அரசு புத்தாண்டை கொண்டாட தடை விதித்து வருகிறது. ஆனால், இந்த கட்டுப்பாடு சில நாட்கள் மட்டுமே. கட்டுப்பாடு இருந்தாலும் புத்தாண்டை கொண்டாட குறைந்த பட்ஜெட்டில் ஒரு குட்டி டூர் போகலாமே. அதற்கு சரியான இடம் தான் கோத்தகிரி.
நீலகிரியில் உள்ள மிகப் பெரிய மலைப் பிரதேசமான கோத்தகிரியை ஊட்டி மற்றும் குன்னூர் ஆகிய மலைப் பிரதேசத்துடன் ஒப்பிடலாம். இது மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் ஊட்டியிலிருந்து 31 கி.மீ தொலைவில் உள்ளது. அல்லது கோயமுத்தூர் மாவட்டத்திற்கு மேற்கேயுள்ள மேட்டுப்பாளையத்தில் இருந்து சரியாக 35 கி.மீ. தொலைவில் உள்ளது.
இதன் அழகிய சூழல் மற்ற இடங்களுடன் ஒப்பிடும் போது கொஞ்சம் அதிகம் தான். இந்த அழகிய மலைப்பிரதேசம் கடல் மட்டத்திலிருந்து 1793 மீ உயரத்தில் உள்ளது. நமக்கு ட்ரெக்கிங் செல்வது மிகவும் பிடித்த ஒரு விஷயம். மலையேறும் போது அந்த மலையின் அழகு, இயற்கை காற்று, அடர்ந்த மலைகள், அமைதியான சூழல் அந்த அனுபவத்தை யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும்.
ஒரு வேளை கோத்தகிரி போறதா இருந்தா, இந்த ஐந்து இடங்களுக்கு போக மறந்து விடாதீர்கள். கோத்தகிரியில் போக வேண்டிய 5 இடங்கள்:
கொடநாடு வியூ பாயின்ட்
ரங்கசாமி தூண் மற்றும் சிகரம்
கேத்தரின் நீர் வீழ்ச்சி
எல்க் அருவி
லாங்க்வுட் ஷோலா
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…