பொங்கல் தினத்தை முன்னிட்டு பெண்கள் வீட்டை அலங்கரித்து, வாசலில் கோலமிட்டு பொங்கலிட்டு அமர்க்களப்படுத்துவார்கள். பெண்களுக்கு உதவியாக ஆண்களும் வீட்டைச் சுத்தம் செய்தல், பொருட்களை வாங்கித் தருதல் என பல வேலைகளைச் செய்வது வழக்கம்தான். ஆனால் இதுபோல ஒரு திறமையான கலைஞர் உங்கள் வீட்டில் இருந்தால், உங்கள் வீடும் அழகாக மாறிவிடும்.
தனக்கு கிடைத்த கோலப் பொடியை, அழகான ஓவியமாக மாற்றத் தெரிந்த கைவினைக் காரர் இந்த பெண். அடடா எத்தனை அழகு ஆச்சர்யங்கள் நிறைந்துள்ளது. கோலப் பொடியில் எப்படி இப்படி ஒரு தத்ரூபமான ஓவியத்தை வரைந்துள்ளார் என அனைவரும் ஆச்சர்யப்படும் அளவுக்கு சாதனையை செய்துள்ளார் இந்த பெண்.
நம் பாரம்பரிய கலையைக் காப்போம் என குறிப்பிட்டு இந்த ஓவியத்தை அவர் வரைந்துள்ளார். அதில் மயில் போல ஒரு பெண் அலங்கரித்துக்கொண்டு தனது கலையான ஆட்டத்தை வெளிக்கொணர்கிறார். அவரது மயில் நடனத்துக்கு காரணமான தலைவன் அவள் அருகிலேயே அழகிய இசைக் கருவி ஒன்றோடு தாளம் இசைத்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு பெண் தன் தலையில் கரகத்தைத் தாங்கி அது நவிழாமல் ஆடி அனைவரையும் அசர வைக்கிறார்.
இந்த புகைப்படங்களைப் பார்த்துவிட்டு எப்படி இருக்குது கோலம்னு நீங்களே கமெண்ட்டில் சொல்லுங்க...!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…