கொடைக்கானலுக்கும் வரும் பலரும், தோட்டக்கலை பூங்கா, தூண் பாறை, தற்கொலை முனை, கோக்கர்ஸ் வாக் சென்று விட்டு கடைசியில், ஏரியில் படகு சவாரி செய்து கொடைக்கானல் பயணத்தை முடித்து விடுகின்றனர். ஆனால் கொடைக்கானலில் ஏராளமான அழகிய இடங்கள் நிறையவே உள்ளன. அந்த வகையில் யாருக்கும் பெரிதாக தெரியாத அழகிய கிராமம் பற்றி பார்க்கலாம்.
திண்டுக்கல்லில் இருந்து 84 கீ.மீட்டரும், கொடைக்கானலில் இருந்து 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஒரு அழகிய கிராமம் தான் பூண்டி. மலைகளின் இளவரசி என கொடைக்கானல் அழைக்கப்படும் நிலையில், கொடைக்கானல் அருகே சுவிட்சர்லாந்து இணையான கிராமமாக இது பார்க்கப்படுகிறது.
பூண்டி கிராம மக்கள் முழுவதும் விவசாயத்தை சார்ந்தே வாழ்பவர்கள், அதன் அழகிய பசுமையான காட்சிகள் உங்கள் மனதை எளிதாக கவர்ந்துவிடும். இயற்கையை நேசிக்கும் மற்றும் பிஸியான அவசர வாழ்க்கையிலிருந்து சிறிது நேரம் செலவிட விரும்பும் அனைவருக்கும் பூண்டி நிச்சயமாக உங்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவமாக இருக்கும். மேலும் புகைப்பர விரும்பியாக நீங்கள் இருந்தால் இந்த இடம் மறக்க முடியாத அனுபவங்களையும், பல நினைவுகளையும் உங்களுக்கு வழங்கும்.
பூண்டியில் பல தங்கும் விடுதிகள் உள்ளன. ஆனால் ஒரே ஒரு குறை தான் அது கிராமம் என்பதால் அங்கு ஆடம்பர விடுதிகள் கிடைப்பது மிக சிரமம். ஆனால் கூடாரம் (டெண்ட்) போன்ற அமைப்புகள் அங்கு அதிகம் என்பதால் குறைந்த கட்டணத்தில் அங்கு தங்கலாம். மேலும் அங்கேயே கேம்ப் பயர் - ஏற்பாடுகளும் அவர்களே செய்து கொடுப்பார்கள்.
நீங்கள் செய்யக்கூடாதை அங்கு ஒன்றே ஒன்று தான் அந்த இடத்தை அசுத்தம் செய்யாமல் இருந்தால் போதும்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…