ஏழைகளின் ஊட்டி மஞ்சோலை தெரியுமா உங்களுக்கு..? தமிழகத்தில் மனிதர்கள் கால் தடம் பதியாத அழகிய இடம் என்றால் அது மஞ்சோலை தான்...!
தமிழகத்தில் மனிதர்கள் கால் தடம் பதியாத அழகிய இடம் என்றால் அது, திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்சி மலைகளுக்கு உள்ளே அமைந்துள்ள மஞ்சோலை தான், ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் இந்த இடம் மணிமுத்தாறிலிருந்து சுமார் 23 கி.மீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 63 கி.மீ தொலைவிலும் உள்ளது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 1162 மீ உயரத்தில் அமைந்துள்ள மாஞ்சோலை, மேல் கோதையாற்றின் அருகில் அமைந்துள்ள ஒரு சிறந்த சுற்றுலா தளமாகும்.இயற்கை அழகு, தட்பவெப்ப நிலை மற்றும் அமைதியான சூழ்நிலை காரணமாக இந்த இடம் உதகமண்டலத்துடன் (ஊட்டி) ஒப்பிடப்படுகிறது.
மாஞ்சோலையில் உள்ள அப்பர் கோதையார் அணை மற்றும் குதிரைவெட்டி இடங்கள் உங்கள் கண்களை ஆச்சர்யப்படும் இடமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மாஞ்சோலைக்கு அருகிலுள்ள மற்ற முக்கிய சுற்றுலாத் தலங்கள் காக்காச்சி மற்றும் நாலுமுக்கு ஆகும். இந்த தோட்டங்கள் வழியாக செல்லும் சாலை இயற்கையின் அழகான மற்றும் அற்புதமான காட்சியை உங்களுக்கு வழங்குகிறது.
அரசின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மஞ்சோலையும் ஒன்று என்பதால் இங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. தனியார் வாகனங்களில் செல்வோர் கட்டாயம் வனத்துறையினரிடம் முன் அனுமதி பெற வேண்டும். மது போன்ற போதைப்பொருள்கள் எடுத்து செல்ல அனுமதி கிடையாது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் வனத்துறை அதிகாரிகளின் சோதனையில் இருந்து தப்புவது என்பது மிக கடினம். மேலும் திருநெல்வேலியில் இருந்து அரசுப்பேருந்துகளும் இயக்கப்படுகிறது. அங்கு ஹோட்டல்களோ உணவகங்களோ இல்லை. நாலுமுக்கில் கிராம மக்கள் நடத்தும் சில சிறிய
கடைகள் மற்றும் டீக்கடைகள் உள்ளன. மாஞ்சோலை எஸ்டேட்டின் அடிவாரத்தில் சிங்கம்பட்டி ஜமீன் என்ற இடத்தில் மாநில சுற்றுலாத் துறையால் தங்கும் இடம் வழங்கப்படுகிறது. குதிரைவெட்டியில் ஒரு விருந்தினர் மாளிகை உள்ளது, அதை முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். இந்த இடம் நிச்சயம் உங்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை உங்களுக்கு வழங்கும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…