பிளஸ் 1 தேர்வில் தோவியடைந்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகேயுள்ள சூதாளம் பகுதியை சேர்ந்த பாபு என்பவரின் மகளான சந்தனா ஸ்ரீ, தேன்கனிக்கோட்டையில் உள்ள அரசுப்பள்லியில் படித்து வந்துள்ளார். இவர் பிளஸ் 1 தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்துள்ளார். இந்நிலையில், 27ம் தேதி முடிவுகள் வெளியான நிலையில், அவர் தேர்வில் தோல்வியடைந்துள்ளார். இதனால் மனம் உடைந்த சந்தனா, திடீரென வீட்டில் உள்ள தனி அறையில் சென்று, மின்விசிறியில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து அலறியடித்து வந்த பெற்றோர், மாணவியின் உடலை மீட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து வந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறிப்பு:- தற்கொலை எதற்கும் தீர்வல்ல
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…