தமிழ்நாடு அரசின் திட்டங்கள், துறை சார்ந்த அறிவிப்புகளின் நிலை குறித்து துறை செயலாளர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
அரசின் திட்டங்கள், சட்டப்பேரவை அறிவிப்புகள் குறித்து துறை செயலாளர்களுடன் 2வது நாளாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டுறவு, பள்ளிக்கல்வி, உயர் கல்வி உள்ளிட்ட துறை செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர். அனைத்து மாவட்டங்களுக்கும், அனைத்து அறிவிப்புகளும் சென்றடைய வேண்டும் என்ற வகையில் இந்த ஆய்வு கூட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…