கோவில்பட்டி அருகே டூ வீலரில் சென்ற அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர், நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன் தினம் இவர் கோவில்பட்டியில் பைக்கில் சென்ற போது திடீரென நாய் ஒன்று குறுக்கே வந்தது.
திடீரென நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறிய சீனிவாசன் கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…