ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலம் அருகே சீனவின் ஏவுகணைகள் விழுந்துள்ளதாக தி ரி பப்ளிக் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவின் கடும் எச்சரிக்கையை மீறி அமெரிக்கா செனட் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி 4 நாள் ஆசிய பயணத்தின் போது தைவானுக்கும் சென்றார். நான்சி பெலோசியின் தைவான் பயணத்தால் ஆத்திரமடைந்த சீனா தைவானில் இருந்து சில பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்தது. மேலும் தைவானை சுற்றி வளைத்து முக்கிய ஆறு இடங்களில் பிரம்மாண்ட போர் பயிற்சியும் நடத்தி வருகிறது.
இந்த போர் பயிற்சியின் போது சீனா ஏவிய 5 ஏவுகணைகள் ஜப்பான் நாட்டின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை ஜப்பான் அரசும் உறுதிப் படுத்தியுள்ளது. நான்சி பெலோசி தைவான் சென்றால் சீனா ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என சீன அரசு எச்சரித்தது. மேலும் ஜப்பானில் அமெரிக்கா ராணுவ தளம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…