இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசை வலியுறுத்தி அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை சமூகங்களின் ஊழியர் சம்மேளனம் இன்று நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளது.
மின்னனு இயந்திர வாக்கு பதிவுக்கு பதிலாக மீண்டு காகித வாக்கு சீட்டுக்கு மாற வேண்டும், தனியார் துறையில் SC/ST/OBC இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம் கொண்டு வர வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) செயல்படுத்தக் கூடாது போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த இந்த பாந்த நடைபெறுகிறது. இதற்கு பகுஜன் முக்தி கட்சி நாடு தழிவிய வேலை நிறுத்ததிற்கு அழைப்பு விடுத்துள்ளது.
வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இதுவெல்லாம் இயங்கும் என்ற தெளிவான அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…