Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மிரட்டும் குரங்கு அம்மை:- குரங்கு அம்மை நோய் சிகிச்சைக்கு சிறப்பு வார்டு

Bala May 25, 2022 & 12:14 [IST]
மிரட்டும் குரங்கு அம்மை:- குரங்கு அம்மை நோய் சிகிச்சைக்கு சிறப்பு வார்டுRepresentative Image.

மதுரை அரசு மருத்துவமனையில் குரங்கு அம்மைக்கான சிகிச்சை வார்டு தொடங்கப்பட்டுள்ளது.

மேற்கத்திய நாடுகளில் கொரோனா வைரசை தொடர்ந்து புதிதாக குரங்கு அம்மை வேகமாக பரவி வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, தமிழகத்தில் குரங்கு அம்மைக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு தொடங்குப்பட்டுள்ளது. அதில் 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கும் வகையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார்டில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வரும் நோயாளிகளின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு புனே ஆய்வகத்திற்கு அனுப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்