இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு தொடர்பான விபரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,710 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,31,47,530 ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஒரே நாளில் சிகிச்சைப் பலனின்றி 14 பேர் இறந்ததை அடுத்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,539 ஆக அதிகரித்துள்ளதாகவும்,
கடந்த 24 மணி நேரத்தில், 2,296 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,04,881 லிருந்து 4,26,07,177 ஆக உயர்ந்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…