ஆந்திராவின் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக ஒய்.எஸ்.விஜயம்மா தெரிவித்துள்ளார்.
ஆந்திர முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மறைவுக்குப் பின், காங்கிரஸிலிருந்து விலகி ஒய்எஸ்ஆர் காங்கிரஸை தொங்கி, ஆட்சியைப் பிடித்தார் அவரது மகன் ஜெகன்மோகன். அவருக்கு பக்கபலமாக இருந்த தாய் ஒய்.எஸ். விஜயம்மா தான் என ஆந்திர அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் கெளரவத் தலைவராக ஒய்.எஸ்.விஜயம்மா இருந்தார். இந்நிலையில், குண்டூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தனது மகனும் முதல்வருமான ஜெகன்மோகன் முன்னிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.
மகனை ஆந்திர முதல்வராக்கியதுபோல, புது கட்சி தொடங்கிய மகளை, தெலுங்கானா முதல்வாரக்குவதே விஜயம்மாவின் திட்டம் என ஆந்திர அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…