கரூரில் மது போதையில் பள்ளிசீருடையுடன் மயங்கி கிடந்த மாணவிகளை மீட்ட போலீசார் அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
கரூரில் உள்ள அரசுப்பள்ளியில் ப்ளஸ் ஒன்னில் தோல்வியடைந்த மாணவிகள் 3 பேர், சிறப்பு தேர்வு எழுதிவிட்டு வந்தனர். அப்போது ஒரு மாணவியின் ஆண் நண்பர் ஒயின் வாங்கித் தந்ததாக கூறப்படுகிறது. இதனை குடித்த மாணவிகள் 3 பேரும் சாலையின் ஓரம் பள்ளிசீருடையுடன் மட்டையாகி மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது.
இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் மாணவிகள் 3 பேரையும் மீட்டு அறிவுரை கூறியதோடு பெற்றோரை வரவைத்து அவர்களுடன் பத்திரமாக அனுப்பி வைத்தனர். மாணவிகளின் இந்த செயல் அப்பகுதி வாசிகளை முகம் சுழிக்க வைத்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…