Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சாப்பாட்டில் உப்பு கொஞ்சம் தூக்கலா போட்ட மருமகளை சுட்டுக்கொன்ற மாமனார்

Bala June 25, 2022 & 16:09 [IST]
சாப்பாட்டில் உப்பு கொஞ்சம் தூக்கலா  போட்ட மருமகளை சுட்டுக்கொன்ற மாமனார்Representative Image.

சாப்பாட்டில் உப்பு அதிகமாக போட்டிருந்த மருமகளை மாமனார் துப்பாக்கியால் சுட்டுக்கொண்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்திரபிரதேச  மாநிலம், லக்னோவை சேர்ந்த காபூர் என்பவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர், மகன் திருமணமாகி குடும்பத்தினருடன் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சிறு சிறு விஷயத்திற்கு கூட காபூர் அதிகமாக கோபப்பட்டு மருமகளை அடிக்கடி திட்டி வந்துள்ளார். ஒரு நாள் சாப்பிட்டில் உப்பு அதிகமாக உள்ளதாக மாமனார் தீட்டிய நிலையில், அப்படி தான் போடுவேன் என்று பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காபூர் மாமனார் என்னையே எதிர்த்து பேசுகிறாயா என கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் குண்டடிபட்ட மருமகள் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மகன் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், போலீசார் வந்து கேட்டபோது திருடன் ஒருவனை சுட முயன்ற போது அந்த குண்டு பாசமான மருமகள் மீது பாய்ந்ததாக கண்னீருடன் தெரிவித்துள்ளார்.

இதில் சந்தேகமடைந்த போலீசார் விசாரணை கோணத்தை மாற்றிய நிலையில், , உப்பு அதிகமாக போட்டதால்  மருமகளை சுட்டதாக காபூர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மருமகளை மாமனர் சுட்டுக்கொண்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்சியையும், பரபரப்பையும் ஏற்ப்படுத்தியுள்ளது.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்