பாகிஸ்தானில் மூத்த ராணுவ அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மழையால் இதுவரை 320 பேர் வரை பலியாகியுள்ளனர். இதனையடுத்து மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பாலூசிஸ்தான் மாகணத்தை அந்நாட்டு பிரதமர் நேரில் சென்று பார்வையிட்ட்டார்.
இதனையடுத்து அங்கு மீட்பு பணிக்காக ராணுவம் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் மீட்பு பணிக்காக மூத்த அதிகாரிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று, பாலூசிஸ்தான் மாகணம் விந்தர் மற்றும், சசி புன்னு இடையே விபத்துக்குள்ளனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விபத்து நடந்த ஹெலிகாப்டரில் 12 ரஆணுவ படைகளை சேர்ந்த ராணுவ தளபதிகள் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஹெலிகாப்டரில் பயணித்தவர்களின் தற்போதைய நிலவரம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…