உரப்பற்றாக்குறை காரணமாக ரஷ்யாவிடம் இருந்து இந்தியா உரம் இறக்குமதி செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் உரம் விலையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி முதல் ரஷ்யாவிலிருந்து உரம் இறக்குமதி செய்ய இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதில், ஆண்டுதோறும் ரஷ்யாவிலிருந்து 18 லட்சம் டன் உரம் இறக்குமதி செய்யும் உடன்படிக்கையை இந்தியா எட்டியுள்ளது. சர்வதேச நாடுகள் ரஷ்ய பொருட்களுக்கு தடை விதித்து வரும் நிலையில், இந்தியா இறக்குமதியை உறுதி செய்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…