ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழப்பவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வண்ணம் உள்ளது. இந்நிலையில் உயிர்களை காவு வாங்கும் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வந்தனர்.
இதனையடுத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு குறித்து விசாரணைக்கு செய்ய நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழுவினர் அறிக்கை அளித்துள்ளனர்.
இந்நிலையில், ஆன்லைன் ரம்மியை தடை செய்வது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். ஆன்லைன் ரம்மியை தடை செய்வது குறித்து கருத்துக் கேட்பு முடிவடைந்த நிலையில், முதல்வர் அவசர ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனையில் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…