ஆளுநரை நடிகர் ரஜினி சந்தித்தது குறித்து சிபிஐஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கடும் விமர்சனம் செய்துள்ளார்.
ஆளுநரை மரியாதை நிமித்தமாக சந்திப்பது ஏற்புடையதே, ஆனால் அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல என ஆளுநரை நடிகர் ரஜினி சந்தித்தது குறித்து சிபிஐஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதியாக செயல்படவும் கூடாது, அப்படி இருக்கையில், பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கான அரசியலை பேச வேண்டிய அவசியம் எதனால் வந்தது என்றும் அதிகார வரம்பு மீறியே செயல்படும் ஆளுநரின் இந்த போக்கினை இன்னும் எத்தனை காலம் பொறுத்துக்கொள்ளப் போகிறோம்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…