சதுரகிரி கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஒவ்வொரு மாத பிரதோஷமும், அமாவாசை வழிபாடும் சிறப்பாக நடத்தப்படுகிறது. அப்போது பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் வனத்துறையினரால் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் ஆனி மாத பிரதோஷம், அமாவாசையையொட்டி சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (ஜூன் 26) முதல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்கள் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…