Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கல்லூரி விட்டு வந்த மாணவி எடுத்த விபரீத முடிவு...கதறி அழுத பெற்றோர்கள்...!

Bala August 18, 2022 & 19:18 [IST]
கல்லூரி விட்டு வந்த மாணவி எடுத்த விபரீத முடிவு...கதறி அழுத பெற்றோர்கள்...!Representative Image.


தூத்துக்குடி அருகே கல்லூரி சென்ற வந்த பின் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அடுத்த இளம்புவனம் பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகள் முத்தம்மாள் (19). கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் வணிகவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரி சென்று வீடு திரும்பிய மாணவி முத்தம்மாள் சோகமாக காணப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் வீட்டின் மாடிக்கு சென்ற மாணவி நீண்ட நேரமாக கீழே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் மேலே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது மாணவி துப்பட்டாவை மின்வீசிறியில் கட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து கதறி அழுத பெற்றோர்கள் எட்டையாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் வந்த போலீசார் மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்