மண் சரிவு காரணமாக கொடைக்கானலில் தற்காலிகமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மழை காரணமாக பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டன. இதனைதொடர்ந்து அடுத்த 2 நாட்களுக்கு நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில் கொடைக்கானலில் பெய்து வரும் கனமழை காரணமாக அடுக்கம் - பெரியகுளம் மலைப்பாதை, குறுடிகாடு சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் விபத்துகளை தவிர்க்க தற்காலிகமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…