இந்திய ராணுவத்தில் 1 லட்சம் காலி பனியிடங்கள் உள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் தொடர்பாகவும் 2022ம் ஆண்டில் ஆட்சேர்ப்பு நடத்துவதற்கான அறிவிப்பு ஏதேனும் வெளியிடப்பட்டுள்ளதா என மக்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்து பேசிய மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட், முப்படைகளிலும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 60 ஆயிரம் காலி பணியிடங்கள் உருவாகின்றதாகவும், அதில் 50 ஆயிரம் காலி பணியிடங்கள் ராணுவத்தில் மட்டும் உருவாவதாகவும், இதற்காக ஆண்டுதோறும் ஆட்சேர்ப்பு நடத்தப்படுவதாக தெரிவித்த அமைச்சர், கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகள் ஆட்சேர்ப்பு நடத்தப்படவில்லை என தெரிவித்தார்.
இதன் காரணமாக 1,08,685 ராணுவ வீரர்கள் பற்றாக்குறை இந்திய ராணுவத்தில் இருப்பதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் எழுத்துப்பூர்வ பதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…