முந்திரி பருப்பை விழுங்கிய குழந்தை பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த பச்சைமலை அருகே உள்ள எருமைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கலைராஜா. விவசாயியான இவருக்கு நிதர்ஸ்ரக்சன் (வயது 4), மகிழ்ந்தேவ் ஆகிய 2 மகன்கள் இருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை குழந்தைகள் இருவரும் விளையாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது, கீழே கிடந்த முந்திரி பருப்பை மகிழ்ந்தேவ் விழுங்கியதாக தெரிகிறது. இதனால் மூச்சு திணறலால் அவதி அடைந்த அவனை துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலையே அவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…