தென்காசி மாவட்டத்தில் இன்று (19-08-2022) முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் ஆகஸ்ட் 20ம் தேதி ஒண்டிவீரன் வீர வணக்க நாள் நிகழ்ச்சி மற்றும் செப்டம்பர் 1ம் தேதி மாவீரன் பூலித்தேவன் பிறந்த நாள் நிகழ்சி ஆகியவை கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று காலை 6 மணி முதல் செப்டம்பர் 2ம் தேதி மாலை 6 மணி வரை 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அம்மாவட்ட ஆட்சுயர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…