பயங்கரவாதத்துக்கு நிதிஉதவி அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளின் படி நேற்றைய தினம் இந்தியா முழுவதும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஃபாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலங்களில் பல்வேறு சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் 100க்கும் மேற்பட்டோர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து இன்று கேரளா மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால், கோவையில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. பொது போக்குவரத்து இயங்காததால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…